

பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ. 23 லட்சத்துக்கு விற்கப்பட்டன.
காங்கயம் அருகே நத்தக்காடையூரை அடுத்துள்ள பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 121 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. இதில், 60 மாடுகள் மொத்தம் ரூ. 23 லட்சத்துக்கு
விற்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக ரூ. 60 ஆயிரத்துக்கு கன்றுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.