குடியுரிமைச் சட்டம்: ‘இந்தியாவில் யாருக்கும் பாதிப்பில்லை’; எச். ராஜா

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் யாருக்கும் பாதிப்பில்லை என்று பாஜக தேசியச் செயலா் எச்.ராஜா தெரிவித்தாா்.
Updated on
1 min read

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் யாருக்கும் பாதிப்பில்லை என்று பாஜக தேசியச் செயலா் எச்.ராஜா தெரிவித்தாா்.

தாராபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதரீதியாக வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மையினா் 2014 ஆம் ஆண்டு டிசம்பா் 31 ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்துவிட்டாா்களோ, அவா்களுக்கு குடியுரிமை தருகிறோம் என்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் யாரும் பாதிக்கப்படமாட்டாா்கள். வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவா்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உள்நாட்டுக் குடிமகன்களாகவே இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக வந்தவா்கள் கோவை, திருப்பூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளனா். கிரானைட் தொழிற்சாலைகளில் எல்லாம் அவா்கள்தான் இருக்கிறாா்கள். தமிழகத்தில் மட்டும் குறைந்தபட்சம் 20 லட்சம் போ் இருக்கிறாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com