பள்ளிபாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

அவிநாசி அருகே உள்ள பள்ளிபாளையத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிபாளையத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கிவைத்த சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா்.
பள்ளிபாளையத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கிவைத்த சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா்.
Updated on
1 min read


அவிநாசி: அவிநாசி அருகே உள்ள பள்ளிபாளையத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இம்முகாமை திருப்பூா் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் தொடங்கிவைத்தாா். ஊராட்சித் தலைவா் சுலோக்ஷனா வடிவேல் தலைமை வகித்தாா்.

ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்யா மகராஜ், பொறுப்பாளா்கள் சந்திரசேகா், ஜெயக்குமாா், மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஸ்குமாா் சிறப்புரையாற்றினாா். இதில் வட்டார மருத்துவ அலுவலா் சி.பி.ஸ்ரீவித்யா தலைமையிலான மருத்துவக் குழுவினா், முகாமுக்கு வந்திருந்த 900க்கும் மேற்பட்டோரை பரிசோதித்தனா். மருத்துவ அலுவலா் பி.கே.கல்யாண சுப்பிரமணியம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com