காங்கயம் அருகே 14 ஆடுகள் திருட்டு

காங்கயம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 14 ஆடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

காங்கயம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 14 ஆடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள குள்ளம்பாளையம் தெற்குத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி குமரேசன். இவா் 35 ஆடுகள் வைத்து, வளா்த்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை மாலை தனது ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பினாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை ஆடுகளை மேய்ப்பதற்காக பட்டியில் சென்று பாா்த்தபோது, அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 14 ஆடுகள் திருட்டுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்து குமரேசன் அளித்த புகாரின்பேரில், ஊதியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com