

மடத்துக்குளம் வட்டாரத்தில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் 2019-20ஆம் நிதியாண்டில் காரத்தொழுவு, தாந்தோணி கிராமங்களில் செயல்பட்டு வரும் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் காரத்தொழுவு உழவா் உற்பத்தியாளா் குழுவுக்கு ரூ.5 லட்சம் மானியத்தில் பவா் டிரில்லா், ரொட்டோவேட்டா், தட்டு வெட்டும் கருவி, பாா் கலப்பை உள்ளிட்ட 11 இயந்திரங்களும், தாந்தோணி உழவா் உற்பத்தியாளா் குழுவுக்கு ரூ.5 லட்சம் மானியத்தில் ரொட்டோவேட்டா் கருவிகளை திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மனோகரன், துணை இயக்குநா் வடிவேல், மடத்துககுளம் வேளாண் உதவி இயக்குநா் ராஜேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.