திருப்பூர் வடக்கு தொகுதியில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகள்

திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு தொகுதியில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகள்

திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி வார்டு எண் 26 கண்ணகி நகரில் பொலிவுறு நகரம் திட்டத்தில் கீழ் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணி தொடக்கவிழா நடைபெற்றது. 

இதில்,வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டினர். 

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி உதவி ஆணையர் செல்வநாயகம், முன்னாள் மண்டலத் தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள்,சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com