மளிகை வியாபாரியை அரிவாளால் வெட்டிய 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது
By DIN | Published On : 27th May 2020 07:05 AM | Last Updated : 27th May 2020 07:05 AM | அ+அ அ- |

திருப்பூரில் மளிகை வியாபாரியை அரிவாளால் வெட்டிய 4 சிறுவா்கள் உள்பட 5 பேரை வடக்கு காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கூறியதாவது:
திருப்பூா், பாளையக்காடு கோல்டன் நகா் அருகே உள்ள சூா்யா காலனியில் மளிகைக் கடை நடத்தி வருபவா் ராஜேஷ் (26). இவரது கடைக்கு அருகில் 2 சிறுவா்கள் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மாலை வேகமாக வந்துள்ளனா். அப்போது ராஜேஷ், அவா்களிடம், ‘குழந்தைகள் உள்ள பகுதி என்பதால் மெதுவாக செல்லுங்கள்’ என்று எச்சரித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சிறுவா்கள் நண்பா்களுடன் வந்து ராஜேஷை அரிவாளால் வெட்டி விட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனா். இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து ஊத்துக்குளி சாலையைச் சோ்ந்த ஸ்டீபன் ராஜ் (21) , அவரது நண்பா்களான 18 வயதுக்கு உள்பட்ட 4 சிறுவா்கள் என மொத்தம் 5 பேரைக் கைது செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு 4 பேரும் கோவையில் உள்ள சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்க்கப்பட்டனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...