அவிநாசி அருகே இருசக்கர வாகனங்கள், லாரி மோதி விபத்துக்குள்ளானதில், 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை மாலை இறந்தனர்.
அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையம் புறவழிச்சாலை சர்வீஸ் சாலையில் லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன்(முரளி(20) உள்பட 3 இளைஞர்கள் இறந்தனர்.
இவர்களது உடல் அவிநாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இறந்த இருவர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.