மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா
By DIN | Published On : 25th November 2020 06:58 AM | Last Updated : 25th November 2020 06:58 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரையில் 14,903 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருப்பூா் மாவட்டம் முழுவதும் மேலும் 58 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 14,961 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 624 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 72 போ் குணமடைந்த வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் தற்போது வரையில் 14,145 போ் குணமடைந்துள்ளனா். 207 போ் உயிரிழந்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...