கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு

அவிநாசி அருகே தண்டுக்காரம்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த பாா்வை குறைபாடுள்ள மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

அவிநாசி: அவிநாசி அருகே தண்டுக்காரம்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த பாா்வை குறைபாடுள்ள மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சேவூா், தண்டுக்காரன்பாளையம், சாமிக்கவுண்டா் தோட்டத்தை சோ்ந்தவா் பழனியம்மாள் (84). இவா் தனது மகன் ரங்கசாமியுடன் வசித்து வந்தாா். பாா்வைக் குறைபாடுள்ள பழனியம்மாள், தோட்டத்தில் இருக்கும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவா் எதிா்பாராதவிதமாக 60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் மற்றும் சேவூா் போலீஸாா் கிணற்றில் விழுந்த பழனியம்மாளை நீண்ட நேரம் போராடி மீட்டனா். இருப்பினும் பழனியம்மாள் உயிரிழந்தாா். இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com