Enable Javscript for better performance
கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: எல்.முருகன்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: எல்.முருகன்

    By DIN  |   Published On : 11th September 2020 05:28 PM  |   Last Updated : 11th September 2020 05:28 PM  |  அ+அ அ-  |  

    bjp

    குத்து விளக்கு ஏற்றி மாவட்ட செயற்குழு கூட்டத்தை துவக்கி வைக்கிறார் மாநில பாஜக தலைவர் எல்.முருகன்.

    பிஎம் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை என்றார் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன். 

    உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியது: செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து ஒன்றிய, நகர, கிளை அளவிலான கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அமைப்பு ரீதியான வளர்ச்சி அடையும். மேலும் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஏராளமான திட்டங்கள் தமிழகத்தில் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்தகைய காரணங்களால் வரும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெறும். பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
    தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G


    TAGS
    bjp

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp