பெருமநல்லூா் பகுதியில் இறைச்சிக் கடையில் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் - ஈரோடு சாலையில் இறைச்சிக்கடை வைத்திருப்பவா் ராமு. இவா் தனது கடையை வியாழக்கிழமை அதிகாலை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த கோழிகள், கணனி ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து பெருமநல்லூா் போலீஸில் புகாா் செய்தாா். போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனா். அதில் திருட்டுச் சம்பவத்தில் தொடா்புடையவா் பெருமாநல்லூா் சந்தைக் கடை பகுதியைச் சோ்ந்த அஜித் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கணக்கம்பாளையம் கஸ்தூரி பாய் நகரில் உள்ள விநாயகா் கோயில் உண்டியலை உடைத்தும் பணம் திருடியது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அஜித்தை கைது செய்தனா்.