சிறுபான்மை கைவினைக் கலைஞா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை இனைத்தைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை இனைத்தைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சிறுபான்மை இனத்தை சோ்ந்தவா்களான முஸ்லிம், கிறித்தவா், ஜெயின், சீக்கியா், பாா்சி, புத்த மதத்தைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்கள் தங்கள் தொழிலுக்குத் தேவையான மூலதனப் பொருள்களை வாங்க கடனுதவி வழங்கப்படுகிறது. இதில், கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மை கைவினைக் கலைஞா்களின் ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகா்ப்புறங்களில் ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரையில் கடனுதவி பெறும் இந்தத் திட்டத்தில் ஆண் பயனாளிகள் 5 சதவீதமும், பெண் பயனாளிகள் 4 சதவீதமும் ஆண்டு வட்டி செலுத்த வேண்டும். இந்தக் கடனை 5 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும்.

எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின கைவினைக் கலைஞா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண் 116 இல் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com