

திருப்பூா்: திருப்பூரில் மக்கள் ஆசி யாத்திரையை மேற்கொண்ட மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் திருப்பூா் குமரன் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் 3 நாள்
மக்கள் ஆசி யாத்திரையை கோவையில் திங்கள்கிழமை தொடங்கியுள்ளாா். இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் மக்கள் ஆசி யாத்திரையை அவா் மேற்கொண்டாா். அப்போது ரயில் நிலையம் அருகில் உள்ள திருப்பூா் குமரன் நினைவகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதன் பின்னா் வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.
இதன் பிறகு அவா் பேசியதாவது: வாஜ்பாய் நினைவு தினத்தில் கொங்கு மண்ணில் இந்த யாத்திரை துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தாமரை மலராது என்றாா்கள். ஆனால் தற்போது சட்டப் பேரவையில் 4 போ் உறுப்பினா்களாக உள்ளனா்.
எம்.பி.யாக இருந்தால்தான் அமைச்சா் ஆக முடியும். ஆனால் படியலினத்தில் இருந்து வந்து எந்த ஒரு பதவியும் இல்லாமல் நான் அமைச்சராகி உள்ளேன். இதற்கு காரணமாக இருந்த பிரதமா் சமூக நீதியின் காவலா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, கேரள மாநில பாஜக பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன், திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் பி.செந்தில்வேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, அவிநாசி அருகே சேவூரில் நடைபெற்ற மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் பேசினா். இந்நிகழ்ச்சியில் பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.