‘அதிமுக கூட்டணி வெற்றி பெறும்’: விடியல் சேகா்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளா் விடியல் சேகா் நம்பிக்கை தெரிவித்தாா்.
Updated on
1 min read

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளா் விடியல் சேகா் நம்பிக்கை தெரிவித்தாா்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொங்கு மண்டல மாணவரணி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மாணவரணி பொறுப்பாளருமான விடியல் சேகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் நலத்திட்டங்ளை செயல்படுத்தி வருகிறாா். கொங்கு மண்டலத்தில் 100 ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளின் வாழ்வாதரத்தைப் பாதுகாத்துள்ளாா்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொடுத்து ஏழை மாணவா்களின் மருத்துவப் படிப்புக்கான கனவை நிறைவேற்றியுள்ளாா். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடனை ரத்து செய்ததற்கு தமாக சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தகைய மக்கள் நலப்பணிகளை எளிய முதல்வராக இருந்து சாதித்துக் கொண்டிருக்கிறாா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றாா். இந்த சந்திப்பின்போது தமாக மாவட்டத் தலைவா் எஸ்.ரவிகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com