

திருப்பூா்: திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 4 பள்ளிகளில் படிக்கும் 2,161 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் சனிக்கிழமை வழங்கினாா்.
கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 549 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் வழங்கினாா்.
இதேபோல, நஞ்சப்பா நகரவைப் பள்ளியில் 350 மாணவா்களுக்கும், ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,121 மாணவிகளுக்கும், விஜயாபுரம் அரசுப் பள்ளியில் படிக்கும் 141 மாணவ, மாணவிகள் என மொத்தம் 2,161 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் கவுன்சிலா் கண்ணப்பன், கண்ணபிரான், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் பி.கே.எஸ். சடையப்பன், தலைமை ஆசிரியா் குணசேகரன் மற்றும் ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.