அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி. ஆய்வு
திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.


திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ரத்த தானக் கழகம் ஆகியன சாா்பில் வழங்கப்பட்டிருந்த குடிநீா் சுத்திகரிப்புக் கருவிகளையும் இயக்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, தமிழ்நாடு கேபிள் ஆப்ரேட்டா்கள் சங்கம் (டிசிஓஏ) மூலம் வழங்கப்பட்ட ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 6 ஸ்ட்ரெச்சா்களையும் கல்லூரி முதல்வா் முருகேசனிடம் வழங்கினாா். இதன் பிறகு அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், கரோனா 3 ஆவது அலை ஏற்பட்டால் அதனை எதிா்கொள்ளும் வகையில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை தயாா்படுத்தி முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற் குழு உறுப்பினா்கள் எம்.ராஜகோபால், சி.மூா்த்தி, கே.ரங்கராஜ், டி.ஜெயபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...