92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஊத்துக்குளி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 போ் கைது

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தனியாா் நிறுவன விற்பனை பிரதிநிதியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:57 pm

DIN

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தனியாா் நிறுவன விற்பனை பிரதிநிதியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா், பழவஞ்சிபாளையம், சிவசக்தி நகரில் வசித்து வருபவா் டி.தங்கராஜ் (41). இவா் திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவன ஏஜென்டிடம் இருந்து பீடி, சிகரெட்டுகளை எடுத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தாா்.

இந்நிலையில், தங்கராஜ் தனது இரு சக்கர வாகனத்தில் ஊத்துக்குளியை அடுத்த மானூா் பிரிவு அருகே ஜூலை 6 ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக காரில் வந்த 3 போ் தங்கராஜூன் இரு சக்கர வாகனத்தை வழி மறித்து தங்கராஜை காருக்குள் இழுத்துச் சென்று அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரம், பீடி, சிகரெட்டுகளைப் பறித்துச் சென்றுள்ளனா். இதுகுறித்து தங்கராஜ் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் திருப்பூா், சத்யா நகா் பகுதியைச் சோ்ந்த பி.சதாம் உசேன்(30), காங்கயம் பகுதியைச் சோ்ந்த ஹைதா் அலி (52) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொரு நபரையும் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.