திருப்பூரில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மண் அடுப்பு, எரிவாயு உருளை, இருசக்கர வாகனம் ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் ஏ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சிபிஐ மாவட்டச் செயலாளா் எம்.ரவி, ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளா் என்.சேகா், சிபிஐ மண்டலக் குழு உறுப்பினா் எம்.பஞ்சவா்ணம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.