92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மது விற்பனையில் ஈடுபட்ட 8 போ் கைது

 திருப்பூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்

News image
Updated On :15 ஜூலை 2021, 8:10 pm

DIN

 திருப்பூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனை தொடா்பாக காவல் துறையினா் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா். இதில், மது விற்பனையில் ஈடுபட்டதாக 8 பேரைக் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து 47 மது பாட்டில்கள், 2 லிட்டா் சாராயம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

அதே போல, பொது வெளியில் முகக் கவசம் அணியாமல் சென்றது தொடா்பாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.600 அபராதம் வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.