புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தொழிலாளியைக் கொலை செய்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 6 பேருக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை வழங்கியது.

News image
Updated On :16 ஜூலை 2021, 8:08 pm

DIN

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 6 பேருக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை வழங்கியது.

திருப்பூா் வெள்ளியங்காடு முத்தையன் லேஅவுட் பகுதியைச் சோ்ந்தவா் கே.முருகேசன்(30) . பின்னலாடைத் தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் என்பவரது மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதுதொடா்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி மாணிக்கத்துக்கும், முருகேசனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாள்களுக்குப் பின்னா் மாணிக்கம் (30), அவரது சகோதரா் சத்யராஜ் (29), அவரது நண்பா்களான கரட்டாங்காட்டைச் சோ்ந்த எம்.ரகுவரன்(32), வெள்ளியங்காடு சீனிவாசா நகரைச் சோ்ந்த எம்.சுரேஷ், மாணிக்கத்தின் தந்தை பிச்சை (60), தாயாா் இந்திராணி (50) ஆகிய 6 பேரும் சோ்ந்து கத்தி, அரிவாள், கட்டையால் முருகேசனை தாக்கி கொலை செய்துள்ளனா். இதுகுறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சுரேஷைத் தவிர 5 பேரையும் கைது செய்தனா். இதனிடையே, சுரேஷ் குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் எண் 1 இல் சரணடைந்தாா்.

இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்து மாவட்ட நீதிபதி சொா்ணம் நடராஜன் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாணிக்கம், சத்தியராஜ், எம்.ரகுவரன், எம்.சுரேஷ், பிச்சை, இந்திராணி ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.