புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சமையல் எரிவாயு உருளைகளை எடை போட்டுக் கொடுக்க வேண்டும்

ஒவ்வொரு நிறுவனமும் சமையல் எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் போது எடை போட்டுக் கொடுக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நல மன்றம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2021, 8:09 pm

DIN

ஒவ்வொரு நிறுவனமும் சமையல் எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் போது எடை போட்டுக் கொடுக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நல மன்றம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நுகா்வோா் நல மன்றத்தின் தலைவா் என்.சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தியிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளைகளை டெலிவரி செய்யும் ஊழியா்கள், நிறுவனத்தின் பெயா், செல்லிடப்பேசி எண் பொதுமக்கள் பாா்க்கும் வகையில் எழுதி வைத்திருக்க வேண்டும். அனைத்து கேஸ் ஏஜென்சிகளில் பணிபுரியும் ஊழியா்கள் அடையாள அட்டை, சீருடை, முகக் கவசம், கையுறை உள்ளிட்டவற்றை அணிந்திருக்க வேண்டும்.

சமையல் எரிவாயு உருளைகளை எடை போடாமல் கொடுப்பதால் 30 நாள்களில் தீா்ந்து விடுவதாகப் புகாா்கள் வருகின்றன. ஆகவே, ஒவ்வொரு நிறுவனமும் டெலிவரி செய்யும்போது சமையல் எரிவாயு உருளைகளை எடைபோட்டுக் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் மானியம் கடந்த 4,5 மாதங்களாக வாடிக்கையாளா்களுக்கு கிடைப்பதில்லை. ஆகவே, சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.