திருப்பூரில் 250 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்
திருப்பூா் அருகே பாரக்காடு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 250 மூட்டை ரேசன் அரிசி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூா் அருகே பாரக்காடு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 250 மூட்டை ரேசன் அரிசி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூா் மாநகராட்சி, முருகம்பாளையம் பாரக்காடு பகுதியில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட குடிமைப் பொருள் பறக்கும் படை அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பறக்கும் படை தனி வட்டாட்சியா் சுந்தரம், தனி வருவாய் ஆய்வாளா் ராஜா உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் பாரக்காடு 4 ஆவது வீதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அந்த வீட்டில் 5 அறைகளில் பதுக்கி வைத்திருந்த 15 டன் எடையுள்ள 250 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த சுகுமாா் என்பவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலா்கள் தெரிவித்தனா். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் நுகா் பொருள் வாணிப கிடங்குக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...