புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்று: பெண் வட்டாட்சியா் பலி

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பெண் வட்டாட்சியா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 8:40 pm

DIN

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பெண் வட்டாட்சியா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்தவா் கா.கலாவதி (50). இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினாா். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன் இவருக்கு கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளது. இதைத்தொடா்ந்து, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.