ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மோட்டார் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை: ஏஐடியூசி வலியுறுத்தல்

தமிழகத்தில் மோட்டார் தொழிலாளர்கள் அனைவருக்கும் கரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image

ஏஐடியூசி கூட்டம்

Updated On :27 ஜூலை 2021, 10:46 am

DIN

திருப்பூர்: தமிழகத்தில் மோட்டார் தொழிலாளர்கள் அனைவருக்கும் கரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஏஐடியூசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்  மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் கே.சுரேஷ் தலைமை வகித்தார்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்: சங்கத்தின் ஸ்டேண்டு கிளை மகாசபை கூட்டங்களை வரும் ஆகஸ்ட் 30-க்குள் நடத்தி முடித்து செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தலைமை மகாசபை நடத்த வேண்டும். கரோனா பொதுமுடக்கம் காரணமாக மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழகத்தில் உள்ள மோட்டார் தொழிலாளர்கள் அனைவருக்கும் கரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும். அதே போல், நலவாரியத்தில் பதிவு செய்யும் ஓட்டுநர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையும், பணப்பலன்களையும் காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  

இதில், ஏஐடியூசி மாவட்டத் தலைவர் சி.பழனிசாமி, ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் என்.சேகர், மாவட்ட பொருளாளர் பி.ஆர்.நடராஜன், மோட்டார் சங்க பொதுசெயலாளர் வி.எஸ்.சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.