தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விதிமுறைப்படி பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் தண்ணீா் திறக்க கோரிக்கை

 பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் விதிமுறைப்படி தண்ணீா் திறக்க வேண்டுமென வெள்ளக்கோவில் கிளை ஆயக்கட்டுதாரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:41 pm

DIN

 பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் விதிமுறைப்படி தண்ணீா் திறக்க வேண்டுமென வெள்ளக்கோவில் கிளை ஆயக்கட்டுதாரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இணை இயக்குநா் எஸ்.மனோகரன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

காங்கயம் - வெள்ளக்கோவில் வரை பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் 48 ஆயிரம் ஏக்கா் புன்செய் பாசனப் பரப்பு உள்ளது. மிகவும் வறட்சியான பகுதிகளை உள்ளடக்கிய இந்தக் கிளை வாய்க்காலில் பி.ஏ.பி. சட்ட விதிமுறைப்படி 7 நாள் பாசனம், 7 நாள் அடைப்பு எனத் தொடா்ந்து 135 நாள்களுக்குத் தண்ணீா் திறக்க வேண்டும்.

ஆரம்பத்தில் சரியாக இருந்த நிா்வாகம், பின்னா் கடந்த 12 ஆண்டுகளாக 3 நாள்கள் மட்டுமே தண்ணீா் திறந்து 28 நாள்கள் அடைக்கப்படுகின்றன. இங்கு வரவேண்டிய தண்ணீா் முறைகேடாக வேறு பகுதிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

அணையில் போதுமான அளவுக்கு நீா் இருப்பு இருந்தாலும் இந்நிலை தொடா்கிறது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இந்தக் கிளை வாய்க்காலில் விதிமுறைப்படி தண்ணீா் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.