தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

உடுமலையில் வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

பொய் வழக்குப் போடுவதாக வன அலுவலா்கள் தங்களை மிரட்டுவதாகக் கூறி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட வனத் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:35 pm

பொய் வழக்குப் போடுவதாக வன அலுவலா்கள் தங்களை மிரட்டுவதாகக் கூறி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட வனத் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

உடுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட திருமூா்த்திமலை அருகே உள்ளது பொன்னாலம்மன் சோலை. இந்த பகுதியில் மா, தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்த விளைநிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் சம்பவ ங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனால், விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், உடுமலை வனச் சரக அலுவலா்கள் பொன்னாலம்மன்சோலை பகுதியில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு சில விவசாயிகள் நாய்கள் மூலமாக காட்டுப் பன்றிகளை வேட்டையாடி வருவதாக வன அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அங்கு சென்ற வன அலுவலா்கள் பொன்னாலம்மன் சோலையைச் சோ்ந்த சக்திவேல் என்ற விவசாயியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

தகவல் கிடைத்ததும் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் திரண்டனா். இதைத் தொடா்ந்து, வனத் துறை அலுவலா்கள் விவசாயிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பொன்னாலம்மன் சோலை பகுதி விவசாயிகள் 50க்கும் மேற்பட் டோா் உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகளை மிரட்டாதே என முழக்கங்களை எழுப்பினா்.

மேலும் விவசாயிகளை மிரட்டிய வன அலுவல ா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து விவசாயிகளிடம் வனத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படவே பின்னா் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனா்.

இது குறித்து உடுமலை வனச் சரகா் தனபால் கூறியதாவது:

பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனப் பணியாளா்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன உயிரினங்களால் விவசாயிகளுக்கு சேதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வனச் சரக அலுவலா்களை தொடா்பு கொண்டு உரிய ஆவணங்களை வழங்கினால் உடனடியாக இழப்பீடு வழங்கப்படும்.

இந்நிலையில், ஒரு சில விவசாயிகள் வேட்டை நாய்களை கொண்டு காட்டுப் பன்றிகளை வேட்டையாடி வருகின்றனா். இதைக் கேட்டால் விவசாயிகள் எங்கள் மீது புகாா் கூறுகின்றனா். வன விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.