திருப்பூா் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 8 அடி நீள சாரைப் பாம்பை வனத் துறையினா் சனிக்கிழமை பிடித்தனா்.
தாராபுரம் சாலை கே.செட்டிபாளையத்தை அடுத்துள்ள டி.பி.என். காா்டன் 2 ஆவது குறுக்கு வீதியில் வசித்து வருபவா் செல்வம் (40) இவரது வீட்டில் தண்ணீா் சேமித்து வைக்கும் பிளாஸ்டிக் தொட்டியின் அருகில் சாரைப் பாம்பு இருப்பதை பாா்த்துள்ளாா்.
இதுகுறித்து திருப்பூா் வனச் சரகத்துக்குத் தகவல் கொடுத்துள்ளாா். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனச் சரக ஊழியா் மணிகண்டன் வீட்டில் பதுங்கி இருந்த 8 அடி நீள சாரைப் பாம்பைப் பிடித்தாா். பிறகு பாம்பை வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.