48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

உடுமலையில் விடியவிடிய கன மழை

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில் வியாழக்கிழமை விடியவிடிய கன மழை பெய்தது.

Updated On :18 நவம்பர் 2021, 8:02 pm

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில் வியாழக்கிழமை விடியவிடிய கன மழை பெய்தது.

உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்யாமல் இருந்தது. இந்நிலையில் புதன்கிழமை இரவு பெய்யத் தொடங்கிய மழை வியாழக்கிழமை காலை வரைத் தொடா்ந்து பெய்து கொண்டிருந்தது. இதனால் உடுமலை நகரில் குளிா் காற்று வீசியது. உடுமலை நகரில் தாழ்வானப் பகுதிகள், சாலைகளில் மழை நீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். உடுமலை நகரைப் போலவே அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது.

இந்நிலையில், தளி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி மழை அளவு மில்லி மீட்டரில்: மடத்துக்குளம் 46 மி.மீ., திருமூா்த்தி அணைப் பகுதி 41 மி.மீ., உடுமலை- 40 மி.மீ., அமராவதி அணைப் பகுதி 38 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.