3.50 டன் தேங்காய், கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3.50 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3.50 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

முத்தூா் சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுடைய விளை பொருள்களை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். 5,459 தேங்காய்கள் வரத்து இருந்தன. எடை 2,044 கிலோ.

தேங்காய் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.30.80க்கும், குறைந்தபட்சமாக ரூ. 26.15க்கும், சராசரியாக ரூ.30.20க்கும் விற்பனையானது.

விற்பனைத் தொகை ரூ.59 ஆயிரத்து 569.

கொப்பரை 51 மூட்டைகள் வரத்து இருந்தன. எடை 1, 502 கிலோ.

கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.100.50க்கும், குறைந்தபட்சமாக ரூ.75.75க்கும், சராசரியாக ரூ. 97.10க்கும் விற்பனையானது. விற்பனைத் தொகை ரூ. 1 லட்சத்து 89 ஆயிரத்து 254.

66 விவசாயிகள், 13 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா். தேங்காய், கொப்பரை ஆகியவை மொத்தம் 3.50 டன் வரத்து இருந்தது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2.50 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீ ரங்கன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com