48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக் கோரி உடுமலையில் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:41 pm

நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக் கோரி உடுமலையில் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுமலை நகராட்சியில் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளா்கள் 250க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் திரண்டு போராடத் தயாராகினா். அப்போது அங்கு வந்த போலீஸாா் அனைவரையும் நகராட்சி அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா் தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதைத் தொடா்ந்து அங்கு வந்த நகராட்சி அலுவலா்கள், ஓரிரு நாளில் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.