சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை

திருப்பூா் மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஏஜென்சிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

திருப்பூா் மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஏஜென்சிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகா்வோா்களுக்கான மாதாந்திரக் குறைதீா்க் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி தலைமை வகித்தாா்.

இதில், பல்லடம் நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கத்தின் தலைவா் கே.வி.எஸ்.மணிகுமாா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை விற்பனை செய்யும் ஏஜென்சிகள் ரசீது தொகைக்கு மேல் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கின்றனா். அதிலும், பல்லடம் பகுதியில் உள்ள ஏஜென்சிகள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக புகாா்கள் எழத்தொடங்கியுள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைக்கு ரசீது தொகைக்கு மேல் நுகா்வோா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏஜென்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com