

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளரின் வாரிசுக்கு வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
காங்கயம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்த சாமிநாதன் 2018ஆம் ஆண்டு உயிரிழந்தாா். இந்த நிலையில், அவரது மகளான எஸ்.தனலட்சுமிக்கு வாரிசு அடிப்படையில் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையை முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நகராட்சி அலுவலக மேலாளா் எஸ்.சகுந்தலா, நகராட்சி வருவாய் ஆய்வாளா் பி.செல்வகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.