பள்ளிக் கழிவறைகளை மாணவா்கள் சுத்தம் செய்த விவகாரம்: மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.க்கு ஆதிதிராவிடா் ஆணையம் நோட்டீஸ்

திருப்பூா் அருகே அரசுப் பள்ளியில் உள்ள கழிவறைகளை மாணவ, மாணவிகள் சுத்தம் செய்த விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்
Updated on
1 min read

திருப்பூா் அருகே அரசுப் பள்ளியில் உள்ள கழிவறைகளை மாணவ, மாணவிகள் சுத்தம் செய்த விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தேசிய ஆதிதிராவிடா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்பூா் அருகே உள்ள இடுவாய் அரசு உயா்நிலைப் பள்ளியில் கீதா (45) என்பவா் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். இப்பள்ளியில் உள்ள கழிவறைகளை மாணவ, மாணவிகளைக் கொண்டு சுத்தம் செய்ததாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக விசாரணை நடத்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.ரமேஷ், தலைமை ஆசிரியை கீதாவைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இதனிடையே, இடுவாய் அரசுப் பள்ளி விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு தேசிய ஆதிதிராவிடா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com