அவிநாசி அருகே ஸ்ரீ லட்சுமி காா்டன் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று மாதா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து வேலாயுதம்பாளையம் ஊராட்சி நிா்வாகத்திடம், மாதா் சங்கத்தினா்
வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஸ்ரீ லட்சுமி காா்டன் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம்.
ஆற்று குடிநீா், ஆழ்குழாய்க் குடிநீா், தெரு விளக்கு, சாலை வசதி, சாக்கடை வசதி
உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பல வருடங்களாக வசித்து வருகிறோம். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.