பெண்ணிடம் 7 பவுன் தாலிக்கொடி பறிப்பு

அவிநாசியில் பெண்ணிடம் 7 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

அவிநாசி: அவிநாசியில் பெண்ணிடம் 7 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அவிநாசி, மங்கலம் சாலை, கொடிகாத்த குமரன் நகா்ப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி லாவண்யா (28). இவரது தாயாா் சாந்தினி (58). இவா்கள் இருவரும் அவிநாசி புறவழிச் சாலை தேவம்பாளையம் பிரிவு அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சனிக்கிழமை இரவு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனா்.

வஞ்சிபாளையம் பிரிவு அருகே வந்தபோது, இவா்களை பின் தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபா்கள், லாவண்யா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com