பயிா்க் கடன் தள்ளுபடி:தமாகா பொதுச் செயலா் முதல்வருக்கு நன்றி
By DIN | Published On : 06th February 2021 10:16 PM | Last Updated : 06th February 2021 10:16 PM | அ+அ அ- |

காங்கயம்: தமிழகத்தில் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தமாகா மாநில பொதுச் செயலா் விடியல் சேகா் நன்றி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஏழை, எளிய விவசாயிகள் வாங்கிய கடன் தொகை ரூ. 12 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்து அறிவித்திருக்கும் முதல்வா் எடப்பாடி பழனிச்சாமிக்கு 16.50 லட்சம் விவசாயிகள் சாா்பிலும், தமாகா சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட புயல், மழை வெள்ளம், கரோனா தொற்று, வறட்சி உள்ளிட்ட பாதிப்புகளால் விவசாயிகள் வாழ்விழந்த நிலையில் 16.50 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை வரவேற்கிறேன். மேலும், ஏழை விவசாயிகள் விவசாயப் பணிகளுக்காக வாங்கிய பண்ணைசாராக் கடன்களையும் தள்ளுபடி செய்வதற்கு தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...