கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வரவேற்று அவிநாசி அருகே சேவூா் பகுதியில் அதிமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தும், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், அவிநாசி வடக்கு ஒன்றியச் செயலாளா் சேவூா் ஜி.வேலுசாமி தலைமையில் அதிமுகவினா் சேவூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.