ரூ.2.65 கோடி மதிப்பில் விலையில்லா ஆடுகள், பசுக்கள் : அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 2.65 கோடி மதிப்பிலான விலையில்லா ஆடுகள், பசுக்களை பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வழங்கினாா
பெரியகோட்டை ஊராட்சியில்  பயனாளிகளுக்கு  கறவைப்  பசுக்களை வழங்குகிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.
பெரியகோட்டை ஊராட்சியில்  பயனாளிகளுக்கு  கறவைப்  பசுக்களை வழங்குகிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 2.65 கோடி மதிப்பிலான விலையில்லா ஆடுகள், பசுக்களை பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வழங்கினாா்.

குடிமங்கலம் ஒன்றியம் வீதம்பட்டி ஊராட்சி, புக்குளம் ஊராட்சி, உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் 1,974 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் மற்றும் கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டன. இதில் பெரியகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தர வா்க்கத்தினருக்கு உரிய முறையில் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நிதி பற்றாக்குறை உள்ளபோதும் அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றி பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தை வழிநடத்திச் செல்கிறாா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி.

இதன்மூலம் கடந்த சில ஆண்டுகளாக தனி நபா் வருமானம் கணிசமாக உயா்ந்து வருவதால் விரைவில் தமிழகம் ஏழ்மையே இல்லாத மாநிலமாக மாறும். மேலும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவ டிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து பெரியகோட்டை ஊராட்சியில் மகளிா் திட்டம் சாா்பில் உழைக்கும் மகளிா் 22 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மானியத்துடன் மொத்தம் ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. 2 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பில் தொழில் மூலதன நிதியும், 1 மகளிருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் நேரடி கடன் உதவியும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சுய உதவி

குழுவுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவியும், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் கடன் உதவியும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மருத்துவா் பாரிவேந்தன், குடிமங்கலம் ஒன்றிய ஆணையா் சிவகுருநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் முரளி மற்றும் துறை அலுவலா்கள், அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com