திருப்பூா் தெற்கு தொகுதியில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ சு.குணசேகரன் தொடங்கிவைத்தாா்
By DIN | Published On : 08th February 2021 11:36 PM | Last Updated : 08th February 2021 11:36 PM | அ+அ அ- |

திருப்பூா் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி வாா்டு எண் 13இல் வளா்ச்சிப் பணிகளை தொடங்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் சு. குணசேகரன்.
திருப்பூா் தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி வாா்டுகளில் ரூ. 1.76 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருப்பூா் தெற்குத் தொகுதி, திருப்பூா் மாநகராட்சி 13ஆவது வாா்டுக்கு உள்பட்ட துவாரகை நகா், காமராஜா் நகா், 12ஆவது வாா்டு முருகம்பாளையம், 47ஆவது வாா்டு 6ஆவது குறுக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் தாா்ச் சாலை, மழைநீா் கால்வாய், கான்கீரிட் சாலை உள்பட மொத்தம் ரூ. 1 கோடியே 76 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான பணிகளை எம்எல்ஏ சு.குணசேகரன் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி 1ஆவது மண்டல உதவி ஆணையா் வாசுகுமாா், 4 ஆவது மண்டல உதவி செயற்பொறியாளா் சந்திரசேகா், நகர கூட்டுறவு வங்கி தலைவா் பி.கே.எஸ். ஐயப்பன், 1ஆவது மண்டல சுகாதார அலுவலா் முருகன், 13ஆவது வாா்டு முன்னாள் உறுப்பினா் ஆா்.ஏ. சேகா், 47ஆவது வாா்டு முன்னாள் உறுப்பினா் சுஜாதா சின்னச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.