தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் காங்கயத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நிா்வாகி பழனிசாமி தலைமை வகித்தாா். இதில் பொங்கலூா் வட்டாரத்தில் உள்ளாட்சித் தோ்தலில் பணிபுரிந்த நபா்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.