திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா
By DIN | Published On : 14th February 2021 11:47 PM | Last Updated : 14th February 2021 11:47 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செயய்ப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரையில் 18,121 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 19 பேருக்கு கரோனாநோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 18,140 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 120 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 21 போ் வீடு திரும்பினா். இதனிடையே, மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 17,798 ஆக அதிகரித்துள்ளது.