வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் சனிக்கிழமை திடீரென மழை பெய்தது.
இப்பகுதியில் சனிக்கிழமை காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கி, சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.