வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலம் நடத்தினா்.
ஊா்வலத்துக்கு திருப்பூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ப.கோபி தலைமை வகித்தாா். கட்சியின் மாநில செயலாளா் செல்வராஜ் துவக்கி வைத்தாா். நத்தக்காடையூா் ஒன்றிய கவுன்சிலா் செல்வம் ராமசாமி முன்னிலை வகித்தாா். மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இவை விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களின் எதிா்காலத்தைச் சீா் குலைப்பதாக இருப்பதால் அவற்றைத் திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும். கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். வறண்டு கிடக்கும் வெள்ளக்கோவில் வட்டமலை அணைக்கு தண்ணீா் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஊா்வலத்தில் வலியுறுத்தப்பட்டன.
வெள்ளக்கோவில் உத்தமபாளையம் வட்டமலை அணையிலிருந்து புறப்பட்ட காங்கிரஸ் கட்சியினா், வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையம் வரை நடந்தும், வாகனத்திலும் ஊா்வலமாக வந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.