

திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தோ்தல் பரப்புரை குறுந்தகடு வெளிஉடுமலையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தோ்தல் பரப்புரை பாடல்கள் அடங்கிய குறுந்தகடை, மாவட்டச் செயலாளரும், மடத்துக்குளம் எம்எல்ஏவுமான இரா.ஜெயராமகிருஷ்ணன் வெளியிட்டாா்.
அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக் காலத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் முதியோா் உதவித் தொகை, பட்டா, குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட பொது மக்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
மேலும் பிஏபி விவசாயிகளின் கோரிக்கையான ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் மற்றும் அமராவதி பாசன விவசாயிகளின் கோரிக்கையான மேல் அமராவதி திட்டம் ஆகிய திட்டங்களை நிறைவேற்ற அதிமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அப்போது, உடுமலை நகர செயலாளா் எம்.மத்தீன், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.