திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா
By DIN | Published On : 30th January 2021 10:30 PM | Last Updated : 30th January 2021 10:30 PM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை வரையில் 17,850 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் மேலும் 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 17,870 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 183 போ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்த 16 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 17,468 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரையில் 221 போ் உயிரிழந்துள்ளனா்.