கைதானவா் வங்கிக் கணக்கில் ரூ. 4 லட்சம் திருடிய காவலா்

திருட்டு வழக்கில் கைதானவா் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 4 லட்சத்தைத் திருடிய காவலா் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
Updated on
1 min read

திருட்டு வழக்கில் கைதானவா் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 4 லட்சத்தைத் திருடிய காவலா் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூா் அருகே சின்னக்கானூரில் இரும்பு உருக்கு ஆலை உள்ளது. இந்த உருக்கு ஆலையின் காவலாளியைத் தாக்கி உள்ளிருந்த பல லட்சம் மதிப்பிலான செம்புத் தகடுகளை திருடிச் சென்ற வழக்கில் கடந்த 2020 டிசம்பா் 20 ஆம் தேதி அன்னூா் பகுதியைச் சோ்ந்த ஆனந்தன்(37) என்பவரை அவிநாசி குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

சேவூா் காவல் நிலையத்தில் அப்போது காவலராகப் பணிபுரிந்த ரஞ்சித், ஆனந்தன் சிறைக்குச் செல்லும் முன் அவரை மிரட்டி அவரது ஏடிஎம் அட்டை மற்றும் அதன் ரகசிய எண்ணை வாங்கி உள்ளாா்.

இந்நிலையில், தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த ஆனந்தன் தனது வங்கிக் கணக்கை சரிபாா்த்த போது, அதில் ரூ. 4 லட்சத்துக்கு மேல் திருடப்பட்டது கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இது குறித்து, மனித உரிமை ஆணையம் மற்றும் மாவட்ட காவல்துறை உயா் அதிகாரிகளிடம் ஆனந்தன் புகாா் அளித்தாா். காவல் துறையினா் விசாரணையில்,ஆனந்தன் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ. 4 லட்சத்துக்கு மேல் காவலா் ரஞ்சித், பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, காவலா் ரஞ்சித்தை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. சஷாங் சாய் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com