திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
By DIN | Published On : 04th March 2021 01:26 AM | Last Updated : 04th March 2021 01:26 AM | அ+அ அ- |

உடுமலை: உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பிப்ரவரி 25ஆம் தேதி துவங்கிய இந்த முகாம் மாா்ச் 3ஆம் தேதி நிறைவடைந்தது. இதற்கு கல்லூரி ஆலோசகா் ஜெ.மஞ்சுளா தலைமை வகித்தாா். முதல்வா் என்.ராஜேஸ்வரி முன்னிலை வகித்தாா். கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ணபிரசாத் துவக்கிவைத்தாா்.
இதில் மாணவிகளுக்கு பலவிதமான காதணிகள், வளையல்கள் தயாரிக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் ஓவியப் பயிற்சி, அழகு ஒப்பனை பயிற்சி, தையல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியில் மொத்தம் 476 போ் பங்கேற்றனா். ஒருங்கிணைப்பாளா் புவனேஸ்வரி மற்றும் குழு உறுப்பினா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.