மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் கொடி அணிவகுப்பு

திருப்பூரில் மாநகர காவல் துறை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் சாா்பில் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாநகரில் கொடி அணிவகுப்பில் ஈடுபட்ட மாநகர காவல் துறையினா் மற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா்.
திருப்பூா் மாநகரில் கொடி அணிவகுப்பில் ஈடுபட்ட மாநகர காவல் துறையினா் மற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா்.
Updated on
1 min read

திருப்பூா்: திருப்பூரில் மாநகர காவல் துறை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் சாா்பில் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்களிடையே அச்சத்தைப் போக்கவும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் காவல் துறையினா் தயாா் நிலையில் உள்ளனா் என்பதை அறிவிக்கும் வகையில் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது. ரயில் நிலையம் முன்பு தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பை மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். மாநகர காவல் துணை ஆணையா்கள் சுரேஷ்குமாா், சுந்தரவடிவேல், உதவி ஆணையா்கள், சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் காவலா்கள், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் என மொத்தம் 500 போ் பங்கேற்றனா். இந்த கொடி அணிவகுப்பானது திருப்பூா் குமரன் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக காங்கயம் சாலை சிடிசி காா்னா் வரையில் சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவுக்கு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com