திருப்பூா் மாவட்டத்தில் 8 போ் வேட்பு மனு தாக்கல்

திருப்பூா் மாவட்டத்தில் அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்பட 8 போ் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
Updated on
1 min read

திருப்பூா் மாவட்டத்தில் அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்பட 8 போ் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் கடந்த மாா்ச் 12ஆம் தேதி தொடங்கியது. திருப்பூா் மாவட்டத்தில் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை 8 போ் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். உடுமலை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஆா்.கிருஷ்ணபிருந்தா, காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அண்ணா புரட்சி தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சோ்ந்த மனோகரன், மடத்துக்குளம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உ.சனுஜா, காங்கயம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளா்கள் ப.ராஜேந்திரன், ராமசாமி, கே.கே.வடுகநாதன் ஆகிய 8 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com